“அதிமுகவ இனி ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது” – ராஜவர்மன் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

 

“அதிமுகவ இனி ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது” – ராஜவர்மன் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுக தொண்டர்கள் ஒருபக்கம் கொந்தளித்தால், சிட்டிங் எம்எல்ஏக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். காலையிலேயே முதல்வரைச் சந்தித்து தனக்கு வாய்ப்பு வழங்குமாறு தோப்பு வெங்கடாசலம் வேண்டுகோள் விடுத்து பூனைக்கு மணியைக் கட்டிவிட்டார். வாய்ப்பு மறுக்கப்பட்ட சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் நேற்றே அதிருப்தியை வெளிப்படுத்தினார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகக் கூறினார்.

“அதிமுகவ இனி ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது” – ராஜவர்மன் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

பரபரப்பான சூழலில் காலையில் டிடிவி தினகரனைச் சந்தித்த ராஜவர்மன் அவர் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். அதற்குப் பின் பேட்டியளித்த அவர், அதிமுகவை இனி ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றும் சசிகலாவுக்கு அதிமுக தலைமை துரோகம் செய்துவிட்டது எனவும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

“அதிமுகவ இனி ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது” – ராஜவர்மன் அதிமுகவிலிருந்து அதிரடி நீக்கம்!

இந்நிலையில் தற்போது அவர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ராஜவர்மன் அடிப்படை உறுப்பினர் முதல் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.