சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

 

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

சாத்தூர் அருகே அச்சன்குளம் மாரியம்மன் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த 12 ஆம் தேதி மாரியம்மாள் பட்டாசு ஆலை என்று பெயரில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் பலியாகினர். அத்துடன் இதில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வழக்கில் சுமார் 7 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக உரிமையாளர் , குத்தகைதாரர் சக்திவேல் , உள்குத்தகைதாரர் பொன்னுப்பாண்டி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு!

இந்நிலையில் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. பெண் தொழிலாளி வைஜயந்தி மாலா மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் சாத்தூர்,மதுரை , தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.