சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி!

 

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே எஞ்சியிருக்கிறது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அதிரடியாக களத்தில் இறங்கியிருக்கின்றன. அந்த வகையில், மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். இன்று காலை திடீரென கமல்ஹாசனை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி!

இதைத் தொடர்ந்து, முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கமல்ஹாசனை சந்தித்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், பழ.கருப்பையாவை மக்கள் நீதி மய்யத்துக்கு உளமாற வரவேற்கிறேன். மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்கிறது. அவர்களுடன் இணைந்து தேர்தலை களம் காணவிருக்கிறோம் என்று கூறினார்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி!

மேலும், மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் நாளை மறுநாள் நடைபெறவிருக்கும் வேட்பாளர் நேர்காணலை பொன்ராஜ், ரங்கராஜன், செந்தில் ஆறுமுகம் மற்றும் சுரேஷ் ஐய்யர் ஆகியோர் நடத்தவுள்ளனர் என்றும் தெரிவித்தார்.