மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

 

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்து வருகின்றன. கடந்த 16ம் தேதி வாக்காளர் வரைவுப்பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம், அதில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது. அதன் படி கடந்த 21ம் தேதியும், 22ம் தேதியும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. டிசம்பர் மாதத்திலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 2 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கவிருக்கிறது.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை!

இதனிடையே, வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை நடத்தவிருக்கிறார். சிறப்பு வாக்காளர் திருத்தம் முறை குறித்த இந்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு காணொளி வாயிலாக நடைபெற உள்ளது.