வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

 

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. விருப்பமனு விநியோகம் நிறைந்து வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மறுபுறம் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. கணக்கில் காட்டாத தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டுவருகின்றன.

வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது: தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

இந்நிலையில் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, “வழக்கமாக தேர்தலில் ஓட்டு போட செல்லும் வாக்காளர்களுக்கு அவர்களது புகைப்படத்துடன் கூடிய வாக்கு சீட்டுகள் வழங்கப்படும். அதை காட்டி அடையாளத்தை உறுதி செய்த பின்னரே வாக்களிக்க அனுமதி வழங்கப்படும். ஆனால் இந்த முறை வாக்கு அனுமதி சீட்டில் புகைப்படம் இடம்பெறாது. வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்கு சீட்டில் வாக்குசாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய தகவல்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும்” என தெரிவித்தார்.