சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில், பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

 

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில், பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

விருதுநகர்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரித்தது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சங்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில், பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

மேலும், பலர் படுகாயமடைந்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த, சாத்தூர் அடுத்த படந்தால் கிராமத்தை சேர்ந்த வீரலட்சுமி என்பவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்து உள்ளது.