சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அதிரடி கைது!

 

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அதிரடி கைது!

சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கில் சமர்பிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. தந்தை, மகன் உயிரிழந்த இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் உடனடியாக விசாரணையை கையிலெடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் பேரில், 10 குழுக்களாக பிரிந்து தீவிர விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அதிரடி கைது!
இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் கொலை வழக்காக சிபிசிஐடி பதிவு செய்தது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் நேற்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளனர். எஸ்.ஐ. ரகு கணேஷை தொடர்ந்து மேலும் 2 பேரையும் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அதிரடி கைது!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் சித்ரவதை மரண வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி அதிரடியாக கைது செய்தது. நெல்லை மாவட்டம் கோவில்பட்டி வழியாக தப்பியோட நினைத்த ஸ்ரீதரை காலை 6.30 மணியளவில் மடக்கி பிடித்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதை தொடர்ந்து ஜெயராஜ் – பெனிக்ஸ் மரண வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கில் ஐந்தாவது நபராக காவல் ஆய்வாளர் ஸ்ரீதரும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.