தந்தை, மகன் சித்ரவதை மரணம்: தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

 

தந்தை, மகன் சித்ரவதை மரணம்: தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த மாதம் ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தந்தை, மகன் சித்ரவதை மரணம்: தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி கைவசம் சென்றுள்ளது.

தந்தை, மகன் சித்ரவதை மரணம்: தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !

இதனிடையே தூத்துக்குடி எம்பி கனிமொழி, தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு கடந்த 26 ஆம் தேதி கனிமொழி கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தந்தை ஜெயராஜ், மகன் பென்னீஸ் மரணத்தில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. விசாரணைக் கைதிகளான தந்தை, மகன் உயிரிழந்தது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தந்தை, மகன் சித்ரவதை மரணம்: தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி, சிறைத்துறை ஐ.ஜி.க்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் !
இந்நிலையில் தந்தை மகன் மரணம் தொடர்பாக தூத்துக்குடி எஸ்பிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக தமிழக டிஜிபி, தூத்துக்குடி எஸ்பி, சிறைத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் புகாரின் அடிப்படையில் பதில் தர தேசிய மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது. இத்துடன் ஜெயராஜ் மரணம் பற்றி கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.