சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன்

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுள் ஒருவரான காவலர் பால்ராஜ் அண்மையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, சிறையில் இருக்கும் 9 காவலர்களுக்கும் ஜாமீன் கிடைக்காத வண்ணம் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மேலும், காவலர்களின் கொடூரத் தாக்குதலாலேயே ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்ததாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு சம்மன்

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கின் விசாரணை நாளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்க உள்ளதை அடுத்து மதுரை சிறையில் உள்ள கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 9 காவல்துறையினருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. வழக்கின் குற்றப்பத்திரிக்கை நகலை பெற்று கொள்ள 9 குற்றவாளிகளையும் பாதுகாப்போடு நாளை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்த உள்ளனர்.