சாத்தான்குளம் தந்தை,மகன் சந்தேக மரணம் அல்ல கொலை- சிபிஐ திட்டவட்டம்

 

சாத்தான்குளம் தந்தை,மகன் சந்தேக மரணம் அல்ல கொலை- சிபிஐ திட்டவட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்கள் பாதுகாப்பு கருதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை,மகன் சந்தேக மரணம் அல்ல கொலை- சிபிஐ திட்டவட்டம்

அதனைத்தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் சாத்தான்குள காவலர்கள் மேலும் 5 பேரை கைது செய்தனர். அவர்களில் 2 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மற்ற 3 காவலர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனையடுத்து அரசு கோரிக்கை விடுத்ததின் பேரில், சிபிஐ போலீசார் வழக்கு விசாரணையை கையிலெடுத்துள்ளனர். இதை தொடர்ந்து இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில், முதற்கட்டமாக கைதான 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் சந்தேக மரணம் என வழக்கு பதிந்திருந்ததை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்தது. வழக்கில் முதல் குற்றவாளியாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷை சிபிஐ சேர்த்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.