சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு!

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு!

இந்த கொலை வழக்கில் சிறையில் உள்ள 9 பேருக்கு அளிக்கப்பட்ட சிபிஐ குற்ற பத்திரிகை நகலில் இவ்வாறு குறிப்பிடபட்டுள்ளது. கோவில்பட்டி கிளை சிறை கண்காணிப்பாளர், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்ற பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு!

அத்துடன் ஜெயராஜ் – பெனிக்ஸ் குடும்பத்தினரிடம் மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணை அறிக்கை, டெல்லியின் தடயவியல் ஆய்வு மைய அறிக்கையும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சாத்தான்குளம் காவல்நிலைய தலைமை காவலர் பியூலா, ரேவதி உள்ளிட்ட 6 போலீசார் பெயர் இடம்பெற்றுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை : காவலர்கள், மருத்துவர்கள் உள்பட 105 சாட்சிகள் சேர்ப்பு!

கடந்த ஜூன் மாதம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார், கைது செய்து சிறையில் அடித்து துன்புறுத்தியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் காவலர் பால்ராஜ் உடல்நல குறைவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.