காவலர்களால் கொல்லப்பட்ட தந்தை, மகன் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம்: நீதிபதிகள் கருத்து

 

காவலர்களால் கொல்லப்பட்ட தந்தை, மகன் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம்: நீதிபதிகள் கருத்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 10 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். முதலில் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு, தமிழக அரசின் கோரிக்கைக்கு இணங்க சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

காவலர்களால் கொல்லப்பட்ட தந்தை, மகன் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம்: நீதிபதிகள் கருத்து

இங்கு தான் இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட இந்த வழக்கு விசாரணை விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், டெல்லியில் இருந்து இந்த வழக்கை விசாரிக்க வந்த சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது. அதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட காவலர்கள் பால்துரைக்கும் முத்துராஜுக்கும் தொற்று பரவியது. கொரோனாவால் தாக்கப்பட்ட காவலர் பால்துரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இவ்வாறு இந்த வழக்கில் பெரும் சிக்கல்கள் நீடித்து வந்ததால், வழக்கு விசாரணை கிடப்பில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

காவலர்களால் கொல்லப்பட்ட தந்தை, மகன் வழக்கு விசாரணையில் நல்ல முன்னேற்றம்: நீதிபதிகள் கருத்து

அப்போது சிபிஐ தரப்பில் சீலிட்ட கவரில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை முழுவதுமாக படித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாகவும் சரியான பாதையில் செல்வதாகவும் கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உருவாக்க குழு உள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உயர்மட்ட குழுவை அமைக்க எடுத்த நடவடிக்கை குறித்து தலைமை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும்,இந்த வழக்கு விசாரணையை செப்.8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.