போலீஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து டாக்டர், மாஜிஸ்திரேட்டுக்கு வலை விரித்த சி.பி.சி.ஐ.டி!

 

போலீஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து டாக்டர், மாஜிஸ்திரேட்டுக்கு வலை விரித்த சி.பி.சி.ஐ.டி!

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மருத்துவ சான்றிதழ் அளித்த அரசு மருத்துவர், ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட்டிட் விசாரணை நடத்தி கைது செய்ய சி.பி.சி.ஐ.டி திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

போலீஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து டாக்டர், மாஜிஸ்திரேட்டுக்கு வலை விரித்த சி.பி.சி.ஐ.டி!சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு காவல்துறை அதிகாரிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

போலீஸ் அதிகாரிகளைத் தொடர்ந்து டாக்டர், மாஜிஸ்திரேட்டுக்கு வலை விரித்த சி.பி.சி.ஐ.டி!

தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் தந்தை, மகன் உடல்நலம் நன்றாக உள்ளது என்று சான்றிதழ் அளித்த மருத்துவர் மற்றும் சரியாக விசாரிக்காமல் ரிமாண்ட் செய்த சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டையும் விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பெண் மருத்துவர் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் எங்கு உள்ளார் என்று போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டை விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதி வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அனுமதி கிடைத்துவிட்டால் பெண் மருத்துவர் மற்றும் மாஜிஸ்திரேட்டிடம் விசாரணை நடத்தி கைது செய்யவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்தவர்களை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.