சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் வழக்கு பதிந்தது சிபிசிஐடி!

 

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் வழக்கு பதிந்தது சிபிசிஐடி!

தமிழகத்தையே உலுக்கியுள்ள சாத்தான்குளம் விசாரணை கைதிகளான தந்தை – மகன் இருவரும் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்ட அவர்கள் ஆசனவாயில் ரத்தம் சொட்டிய படி உடலில் பல காயங்களுடன் இறந்தனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்து வந்த உயர்நீதி மன்ற மதுரைகிளை தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என தெரிவித்துள்ளது. முதல் தகவல் அறிக்கை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளின் முரண்பாடு இருக்கிறது. உடலில் மோசமான காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று கூறியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் வழக்கு பதிந்தது சிபிசிஐடி!

இந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தும் மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவின் பேரில் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபினபு அவர்களிடமிருந்து சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் பெற்றுக்கொண்டார். இதன்படி தற்போது முதல் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் வழக்கு பதிந்தது சிபிசிஐடி!

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை-மகன் மரண விவகாரத்தில் சிபிசிஐடி வழக்கு பதிந்துள்ளது. வழக்கின் ஆவணங்களை பெற்ற டிஎஸ்பி அனில்குமார் சிபிசிஐடி வழக்கு 1,2 என பதிவு செய்துள்ளார்.