‘எப்படி இருக்கிறார் சசிகலா?’ மருத்துவ கண்காணிப்பாளர் சொல்லும் தகவல்!

 

‘எப்படி இருக்கிறார் சசிகலா?’ மருத்துவ கண்காணிப்பாளர் சொல்லும்  தகவல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவ கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

‘எப்படி இருக்கிறார் சசிகலா?’ மருத்துவ கண்காணிப்பாளர் சொல்லும்  தகவல்!

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா அளித்துள்ள பேட்டியில்,பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உடல்நிலை தற்போது சீராக உள்ளது. அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

‘எப்படி இருக்கிறார் சசிகலா?’ மருத்துவ கண்காணிப்பாளர் சொல்லும்  தகவல்!

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா உடல்நல குறைவு காரணமாக நேற்றுமுன்தினம் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிடி ஸ்கேன் வசதி இல்லாததால் அங்கிருந்து நேற்று பிற்பகல் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அத்துடன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு தொற்று இருப்பதும் உறுதியானது. இதனால் சசிகலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.