நாகூரில் முகாமிட்ட சசிகலா… அடுத்த பிளான் இது தானாம்!

 

நாகூரில் முகாமிட்ட சசிகலா… அடுத்த பிளான் இது தானாம்!

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, அரசியல் களத்தை தெறிக்க விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் அரசியலில் இருந்து விலகப்போவதாக திடீர் அறிக்கை வெளியிட்டு எல்லாருக்கும் ஷாக் கொடுத்தார் சசிகலா. இந்த செய்தி டிடிவி தினகரன் தலையில் பேரிடியாக விழுந்தது.

நாகூரில் முகாமிட்ட சசிகலா… அடுத்த பிளான் இது தானாம்!

தனக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சியை அறிந்து அரசியலில் இருந்து விலகிக் கொண்ட சசிகலா, ஆன்மீக பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்து விட்டார். அண்மையில் தஞ்சாவூர் சென்ற அவர், தனது உறவினர்களிடம் சீக்கிரமாக நல்ல செய்தி வரும் என்று கூறினாராம். 30 ஆண்டுகளாக ஜெயலலிதா உடனேயே இருந்து அரசியலில் கைத் தேர்ந்த சசிகலா, இவ்வாறு சொல்லியது அரசியல் வருகைக்கான குறிப்பாகவே பார்க்கப்பட்டது. அரசியலில் இருந்து விலகினாலும் அவர் அதிமுகவின் நகர்வுகளை கவனிக்காமல் இல்லை.

நாகூரில் முகாமிட்ட சசிகலா… அடுத்த பிளான் இது தானாம்!

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர், சென்னை போயஸ்கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டில் குடியேறி விட வேண்டும் என அவர் தீர்மானித்திருக்கிறாராம். அதன் பிறகு, அவரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம். அண்மையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கொடுத்த பேட்டி ஒன்றும் இதையே உணர்த்தியது. இந்த உற்சாகத்திலேயே சசிகலா, ஆன்மீக பயணத்தை தொடருகிறாராம்.

நாகூரில் முகாமிட்ட சசிகலா… அடுத்த பிளான் இது தானாம்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகூர் சென்ற சசிகலா, அங்குள்ள நாகநாத சுவாமி கோவிலில் வழிபாடு செய்தார். அதன் பிறகு, நாகூர் தர்காவுக்கு சென்று வழிபாடு செய்திருக்கிறார். ‘புலி பதுங்குவது பாய்வதற்கு தான்’ என்பதை உணர்த்துவது போல இருக்கிறது சசிகலாவின் செய்கைகள்…!