“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

 

“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது என்று விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தததில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா உறுதுணையோடு எழுந்து நடப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு சசிகலா நன்றாக ஒத்துழைக்கிறார்.

“சசிகலா எழுந்து நடக்கிறார் ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்”

சசிகலாவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் கவனித்து வருகிறார்கள். அத்துடன் சசிகலாவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதேபோல் சசிகலா உணவு உட்கொள்வதாகவும் , ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.