போயஸ்கார்டனில் மீண்டும் சசிகலா!

 

போயஸ்கார்டனில் மீண்டும் சசிகலா!

பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தமிழகத்துக்குள் மாஸ் என்ட்ரி கொடுத்தார். சென்னை வந்த சசிகலா அதிமுகவை ஆட்டம் காண வைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார். அவர் இப்படி அமையாக ஒதுங்க என்ன உண்மைக் காரணம் என்பது இதுவரை தெரியவரவில்லை. அதன்பின் தனது சொந்தவூரான தஞ்சைக்கு சென்ற அவர், கோவில் கோவிலாக ஆன்மீக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது, அவரது ஆதரவாளர்கள் பலரையும் சசிகலா சந்தித்தார்.

போயஸ்கார்டனில் மீண்டும் சசிகலா!

இந்நிலையில் தஞ்சையிலிருந்து சென்னை திரும்பிய சசிகலா போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் தனது இல்லத்தை பார்வையிட்டார். தனது தோழி ஜெயலலிதா அரசியல் பயணம் தொடங்கிய அதே போயஸ் கார்டன் பகுதியில் இருந்தே தனது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் அவசர அவசரமாக வேதா இல்லத்தைவிட மிகப்பெரும் பங்களாவை போயஸ் கார்டனில் கட்டிவருகிறார். இந்த கட்டடம் கே.கார்த்திகேயன் என்பவர் இயக்குநராக இருக்கும் ஸ்ரீஹரிசந்தனா எஸ்டேட்ஸ் பிரைவேட் லிட் சார்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்காக கட்டப்பட்டு வரும் இந்த வீட்டின் கட்டுமான பணிகளை காண சசிகலா இன்று போயஸ் கார்டன் வந்தார். அவருடன் இளவரசியின் மகன் விவேக் ஜெயராம் உள்ளிட்ட அவரது உறவினர்களும் வந்தனர். சுமார் 2 மணி நேரம் அங்கிருந்த சசிகலா, கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.