மீண்டும் அதிமுக கொடியுடன் அறிக்கை வெளியிட்ட சசிகலா!

 

மீண்டும் அதிமுக கொடியுடன் அறிக்கை வெளியிட்ட சசிகலா!

சசிகலாவை அதிமுக கர்நாடக மாநில செயலாளர் யுவராஜ் சந்தித்து பேசினார்.

மீண்டும் அதிமுக கொடியுடன் அறிக்கை வெளியிட்ட சசிகலா!

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் முகாம் அலுவலகத்திலிருந்து அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களை கர்நாடக மாநில கழக செயலாளர் யுவராஜ் அவர்கள் தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் அஇஅதிமுக பொதுச்செயலாளர் சின்னம்மாவை, மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்பட கலைஞர் ரூபன் தனது குடும்பத்தினருடன் சந்தித்தது தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகம் வர கார் கொடுத்து உதவியர் யுவராஜ் தான். சசிகலாவுக்கு கார் கொடுத்ததற்காக யுவராஜை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது.