அதிமுக துண்டு அணிந்தபடி சசிகலா சாமி தரிசனம்!

 

அதிமுக துண்டு அணிந்தபடி சசிகலா சாமி தரிசனம்!

சென்னை நோக்கி வருகை தரும் சசிகலா, முத்துமாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அதிமுக துண்டு அணிந்தபடி சசிகலா சாமி தரிசனம்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். கடந்த சில நாட்களாக பெங்களூரில் உள்ள தனியார் விடுதியில் ஓய்வு பெற்று வந்த சசிகலா இன்று தமிழகம் வந்துள்ளார். அவருக்கு அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அதிமுக துண்டு அணிந்தபடி சசிகலா சாமி தரிசனம்!

சிறைக்கு செல்லும் முன் அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலா தற்போது, ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளர் தான் என்று அவர்களும் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.

அதிமுக துண்டு அணிந்தபடி சசிகலா சாமி தரிசனம்!

இந்நிலையில் அதிமுக துண்டு அணிந்தபடி ஓசூர் முத்துமாரியம்மன் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயில் பிரகாரத்தை சுற்றிய அவர், டிடிவி தினகரன், இளவரசியுடன் இணைந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த அதிமுக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி போலீசார் அதிமுக கொடியை சசிகலா காரிலிருந்து நீக்க, நோட்டீஸ் அளித்துள்ளது.