சசிகலா வருகை : சாலைகளில் போலீஸ் குவிப்பு!!

 

சசிகலா வருகை : சாலைகளில் போலீஸ் குவிப்பு!!

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையான சசிகலா பெங்களூருவில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார்.

சசிகலா வருகை : சாலைகளில் போலீஸ் குவிப்பு!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார்.ஆனால் விடுதலைக்கு முன்பே அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . இதையடுத்து கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் பெங்களூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் ஓய்வு எடுத்து வந்தார்.

சசிகலா வருகை : சாலைகளில் போலீஸ் குவிப்பு!!

இந்நிலையில் 7 நாட்கள் ஓய்வுக்கு பிறகு சசிகலா இன்று சென்னை திரும்புகிறார். பெங்களூரிலிருந்து சென்னைக்கு சசிகலா உள்ள நிலையில் சாலைகளில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு அமமுகவினர், அதிருப்தி அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு செய்ய திட்டமிட்டுள்ளனர். சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளதாகவும், கர்நாடகா – தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் வரவேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்த சூழலில் சசிகலா தங்கியுள்ள தனியார் ரிசார்ட் முன்பு ஏராளமான ஆதரவாளர் குவிந்துள்ளனர்.