“தலைமைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டாம்; சசிகலாவே வேண்டும்” போஸ்டரால் பரபரப்பு!

 

“தலைமைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டாம்; சசிகலாவே வேண்டும்” போஸ்டரால் பரபரப்பு!

ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு, சசிகலா தலைமை ஏற்க வேண்டுமென வலியுறுத்தி, நாகர்கோவிலில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

“தலைமைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் வேண்டாம்; சசிகலாவே வேண்டும்” போஸ்டரால் பரபரப்பு!

சசிகலாவை ஒதுக்கி வைத்ததே, அதிமுக தோல்விக்கு என அக்கட்சியின் நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கின்றனர். மேலும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே அதிமுகவுக்கு
எதிர்காலம் உண்டு எனவும் கூறுகின்றனர். சசிகலா தலைமை ஏற்க வலியுறுத்தி, முதற்கட்டமாக ஒரு லட்சம் கையெழுத்துகள் வாங்கி, அதிமுக தலைமையிடம் கொடுக்க அதிமுக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

Image

இதனால் சசிகலா தலைமை ஏற்க வேண்டுமென கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.