‘அரசியலை விட்டு விலகி’ ஆன்மீகத்தை நோக்கிச் செல்லும் சசிகலா!

 

‘அரசியலை விட்டு விலகி’ ஆன்மீகத்தை நோக்கிச் செல்லும் சசிகலா!

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் அனல் பறந்துக் கொண்டிருக்கிறது. திடீர் திருப்பமாக சசிகலா மற்றும் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ஒதுங்கி விட்டார்கள். அதிமுகவை மீட்டெடுக்க வேண்டுமென துடித்துக் கொண்டிருக்கும் சசிகலா, சிறையில் இருந்து விடுதலையான பிறகு அதற்கான வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டார். இதற்காகவே, வழக்குகள் அனைத்தையும் தூசி தட்டினார்.

‘அரசியலை விட்டு விலகி’ ஆன்மீகத்தை நோக்கிச் செல்லும் சசிகலா!

சசிகலாவை சேர்த்துக் கொள்ள சொல்லி பாஜக தலைமையே அதிமுகவுக்கு கோரிக்கை விடுத்தது. எதையும் காதில் போட்டுக் கொள்ளாத அதிமுக, சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. தன்னை சுற்றி நடக்கும் வேளைகளை சரியாக கணித்த சசிகலா, அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிக்கை வெளியிட்டார். சசிகலாவை முன்வைத்து அமமுகவை தேர்தலில் தேற்றி விடலாம் என்ற டிடிவி தினகரனின் கனவு பாழாய் போனது.

‘அரசியலை விட்டு விலகி’ ஆன்மீகத்தை நோக்கிச் செல்லும் சசிகலா!

இனிமேல் சசிகலா இல்லாமல் தான் அமமுக செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொண்ட தினகரன், மனதை தேற்றிக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில், அரசியலில் இருந்து விலகிக் கொண்ட சசிகலா தற்போது ஆன்மீகத்தை நோக்கி சென்றிருக்கிறார். வரும் 15ம் தேதி முதல் தமிழகத்தில் இருக்கும் பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலில் குதிக்கும் பொருட்டு சசிகலா இந்த ஆன்மீக பயணத்தை மேற்கொள்ளலாம் என்கிறார்கள் சிலர்..!