டிச. 3 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா! டிச.5 இல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி…

 

டிச. 3 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா! டிச.5 இல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி…

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சிறை விதிகளின் படி, அவர் கடந்த ஆகஸ்ட் மாதமே விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா விடுதலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இதனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நரசிம்மமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கர்நாடக சிறைத்துறை, அவர் ஜனவரி மாதம் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்திருந்தது. மேலும் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.10.10 கோடி அபராதத்தை செலுத்தியதால் ஜனவரிக்கு முன்பாகவே வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது.

டிச. 3 ஆம் தேதி விடுதலையாகிறார் சசிகலா! டிச.5 இல் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி…

இந்நிலையில் சசிகலா டிசம்பர் 3ஆம் தேதி விடுதலையாகவிருப்பதாக சசிகலாவுக்கு நெருக்கமான நபர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் வரும் திங்கட் கிழமை அதற்கான எழுத்துப்பூர்வமான உத்தரவு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர். வெளியே வந்தவுடன் சசிகலா, திநகரில் உள்ள இளவரசி வீட்டில் தங்கவுள்ளார் என்றும், ஜெயலலிதாவின் நினைவுநாளான டிசம்பர் 5 ஆம் தேதி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.