சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

 

சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, பெங்களூருவிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தண்டனை காலம் முடிவடைந்ததால் அவர், சிறையிலிருந்து ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்ற செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருந்தது, அந்த நேரத்தில் திடீரென்று சசிகலாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சசிகலாவுக்கு வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது- மருத்துவமனை அறிக்கை

இந்நிலையில் இன்று இரவு இரவும் 10 மணியளவில் சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சசிகலா அவர்களுக்கு ஏற்பட்ட வைரஸ் பாதிப்பின் தன்மை குறைந்துள்ளது. சசிகலா நல்ல உடல்நலத்துடன் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சீராக உள்ளார். சசிகலா அவர்களின் ரத்தத்தில் 97% ஆக்சிஜன் அளவு உள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை சசிகலாவுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து சிகிச்சைகளுக்கும் சசிகலா தகுந்த ஒத்துழைப்பு அளிக்கிறார். கொரோனா வார்டில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.