மதுரை மீனாட்சியை தரிசித்த சசிகலா! கையெடுத்து கும்பிட்ட பொதுமக்கள்

 

மதுரை மீனாட்சியை தரிசித்த சசிகலா! கையெடுத்து கும்பிட்ட பொதுமக்கள்

கடந்த 4 ஆண்டுகளாக சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா ஜனவரி 27 ஆம் தேதி விடுதலையானார். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், குணமாகி கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். இதையடுத்து சசிகலா வருகை அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த மார்ச் 3ஆம் தேதி அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா வெளியிட்ட அறிவிப்பை வெளியிட்டார். அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள சசிகலா, கடந்த மார்ச் 15 முதல் ஆன்மீக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மதுரை மீனாட்சியை தரிசித்த சசிகலா! கையெடுத்து கும்பிட்ட பொதுமக்கள்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். மீனாட்சியம்மன் கோயில் வெளிபிரகாரத்தில் உள்ள மதுரை வீரன் கோயிலிலும் அவர் சிறப்பு வழிபாடு நடத்தினார். கோயிலுக்கு வந்த பக்தர்கள், பொதுமக்கள் சசிகலாவுக்கு வணக்கம் தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து மதுரை அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.