‘இனிமே என்னால சும்மா இருக்க முடியாது’ – சசிகலாவின் அதிரடி ஆடியோ!

 

‘இனிமே என்னால சும்மா இருக்க முடியாது’ – சசிகலாவின் அதிரடி ஆடியோ!

தொண்டர்கள் மனக்குமுறல்கள் அதிகமாக இருப்பதால் இனிமேலும் சும்மா இருக்க மாட்டேன் என சசிகலா ஆடியோ வெளியிட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய பிறகு கட்சிக்குள் பூகம்பமே வெடித்தது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே எழும் மோதல் இன்றளவும் ஓய்ந்தபாடில்லை. எனினும், கட்சியை சுமுகமாக கொண்டு செல்லும் வண்ணம் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடியும் எதிர்க்கட்சி துணை தலைவராக ஓபிஎஸ்சும் பொறுப்பேற்றுக் கொண்டு கட்சியை வழிநடத்திச் செல்கின்றனர். தற்போதைய சூழலில் உட்கட்சி பூசலையும் தாண்டி அதிமுகவுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்னை சசிகலா தான்.

‘இனிமே என்னால சும்மா இருக்க முடியாது’ – சசிகலாவின் அதிரடி ஆடியோ!

ஆட்சியை பறிகொடுத்தது போல, கட்சியையும் சசிகலாவிடம் பறிகொடுத்து விடக்கூடாது என்பதில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் உறுதியாக இருக்கின்றனர். சசிகலாவுடன் போனில் பேசுபவர்களை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை வருகிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சசிகலா, அதிமுக தொண்டர்களை தன் வசப்படுத்தி வருகிறார்.

‘இனிமே என்னால சும்மா இருக்க முடியாது’ – சசிகலாவின் அதிரடி ஆடியோ!

இந்த நிலையில், அதிமுக தொண்டரும் சசிகலா பேசிய மற்றோரு ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், இனிமே அதிமுக வீணாகிறத பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். நான் வந்தா தான் நல்லதுன்னு தொண்டர்கள் சொல்லிட்டாங்க. நிச்சயம் வரேன். தொண்டர்களை கவலைப்பட விட மாட்டேன். தொண்டர்களின் துணையுடன் கட்சியை மீட்பேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.