“23 மணி நேர தொடர் பயணம்” அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா

 

“23 மணி நேர தொடர் பயணம்” அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா

23 மணி நேர தொடர் பயணத்திற்கு பிறகு இன்று அதிகாலை சசிகலா சென்னை வந்தடைந்தார்.

“23 மணி நேர தொடர் பயணம்” அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா 4 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதன் பிறகு நேற்று காலை 7.45 மணிக்கு பெங்களூருவிலிருந்து புறப்பட்ட சசிகலாவுக்கு வழியெங்கிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் சசிகலாவுக்கு வழியெங்கிலும் பூ தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

“23 மணி நேர தொடர் பயணம்” அதிமுக கொடியுடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா

இந்நிலையில் இன்றும் அதிகாலை தொண்டர்களின் வரவேற்புடன் சென்னை வந்தடைந்தார் சசிகலா. நேற்று காலை பெங்களூருவில் இருந்து புறப்பட்டவர், 23 மணி நேர பயணத்திற்குப் பின்னர் தி.நகரில் உள்ள வீட்டுக்கு வந்தார். முன்னதாக வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அன்புக்கு நான் அடிமை, தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை, கொண்ட கொள்கைக்கு நான் அடிமை, தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் அடிமை. ஆனால், அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன். தொண்டர்களுக்காக நிச்சயமாகத் தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என்று அதிரடியாக அறிவித்தார்.