என்ன செஞ்சாலும்… என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது : கதிகலங்க வைக்கும் சசிகலா!

 

என்ன செஞ்சாலும்… என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது : கதிகலங்க வைக்கும் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா, அதிமுகவை அதிர வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் முடியும் வரை மௌனம் காத்தார் சசிகலா. தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை கோட்டைவிட்டதால், இப்போது அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

என்ன செஞ்சாலும்… என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது : கதிகலங்க வைக்கும் சசிகலா!

அதிமுக தொண்டர்களுடன் பேசி அடுத்தடுத்த ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்த ஆடியோக்கம் இரட்டைத் தலைமையை ஆட்டம் காண வைத்தது. தொண்டர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 40 ஆடியோக்களுக்கு மேல் வெளியானதால், ஓபிஎஸ் – ஈபிஎஸ் அதிரடி முடிவை எடுத்தனர். சசிகலாவுடன் பேசுபவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் உட்பட 15 பேரை கட்சியில் இருந்து நீக்கினர்.

என்ன செஞ்சாலும்… என்னையும் தொண்டர்களையும் பிரிக்க முடியாது : கதிகலங்க வைக்கும் சசிகலா!

ஓபிஎஸ் – ஈபிஎஸ்சின் இந்த நடவடிக்கை சசிகலாவிடம் எடுபடவில்லை. அதிமுக தொண்டர்களிடம் பேசுவதை அவர் நிறுத்தவில்லை. இந்த நிலையில், அதிமுக தொண்டரிடம் சசிகலா பேசிய 62 ஆவது ஆடியோ வெளியாகியுள்ளது. தொண்டர்களையும் என்னையும் பிரிக்க முடியாது; என்ன தான் தீர்மானம் போட்டாலும் தாயையும் பிள்ளையையும் பிரிக்க முடியாது என அதிரடியாக பேசியுள்ளார். தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் சசிகலா ஆடியோக்களை வெளியிடுவது அதிமுகவினரை கதிகலங்க வைத்துள்ளது.