கமலுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு : வலுவாகும் 3வது அணி!

 

கமலுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு : வலுவாகும் 3வது அணி!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு சரத்குமார் வருகை புரிந்துள்ளார்.

கமலுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு : வலுவாகும் 3வது அணி!

வருகிற 2021- சட்டசபைத் தேர்தல், ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த சமகவின் தலைவர் சரத்குமார் கூட்டணி அமைப்பதாக அறிவித்தனர். அதிக தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ள நிலையில், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளன. அதே சமயம் பாஜக – அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், மூன்றாவது அணியின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பை உண்டாகியுள்ளது.

கமலுடன் சரத்குமார் திடீர் சந்திப்பு : வலுவாகும் 3வது அணி!

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு சரத்குமார் வருகை தந்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசனை சந்தித்து பேசி வருகிறார். சட்டப்பேரவை தேர்தலில் ஐ.ஜே.கே. – சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ள நிலையில் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சரத்குமாருடன் ஐ.ஜே.கே.பொதுச்செயலாளர் ரவி பாபுவும் கமல் ஹாசனை சந்தித்து பேசி வருகின்றனர்