இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – சரத்குமார்

 

இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – சரத்குமார்

கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் விளக்கம் என்று கடந்த ஜனவரி மாதம் வீடியோ ஒன்றை வெளியிட்டது. தற்போது மாரிதாஸ் இ-மெயில் பிரச்னை பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் வெளியான கந்த சஷ்டி வீடியோவுக்கு தீவிர வலது சாரிகள் ஜூலை மாதம் கண்டனம் தெரிவித்து பதிவிட ஆரம்பித்தனர். ஆறு மாதம் கழித்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சானலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொந்தளித்தனர். இது தொடர்பாக தமிழக பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகார் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து செந்தில் வாசன் என்ற நிர்வாகியை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீல் வைத்தனர்.

இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் – சரத்குமார்

இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வருகின்ற கலாசாரம், தெய்வ வழிபாடு, நம்பிக்கை, இவைகளைக் கொச்சைப் படுத்துவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு எந்த அறிவு மூடர்களும் வாய் திறவாமல் நம் ஹிந்துக்கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். கனவில்கூட அவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது, தப்பித் தவறி கனவில் வந்தால் உடனே எழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும். எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள். ஒரு வாதத்திற்கு கேட்கிறேன் இந்தக் கறுப்பர் மந்தைகள் மற்ற மதத்தை அந்த மதப் போதனைகளை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? ஹிந்துக்களை, ஹிந்துமதத்தை இழிவுபடுத்தினால் யாரும் கேட்க மாட்டார்கள் என்று தொடர்ந்து விமர்சிக்கின்ற கூட்டத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்டவேண்டும். விளம்பரம் தேடுபவர்கள் ஒடுக்கப்பட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.