சிறையில் உயிரிழந்த தந்தை,மகன் குடும்பத்துக்கு சரத்குமார் ரூ.5 லட்சம் நிதியுதவி!

 

சிறையில் உயிரிழந்த தந்தை,மகன் குடும்பத்துக்கு சரத்குமார் ரூ.5 லட்சம் நிதியுதவி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் படி இந்த வழக்கில் 24 மணி நேரமாக அதிரடி விசாரணை மேற்கொண்ட போலீசார், கிடைக்கப்பெற்ற சாட்சியங்களின் அடிப்படையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாகத் தாக்கிய 5 காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர். அதன் படி, 5 காவலர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறையில் உயிரிழந்த தந்தை,மகன் குடும்பத்துக்கு சரத்குமார் ரூ.5 லட்சம் நிதியுதவி!

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பல நெட்டிசன்கள் கண்டனக்குரல் எழுப்பினர். இதனிடையே திமுக சார்பிலும், அதிமுக சார்பிலும் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் சாத்தான்குளம் சென்று மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்குச் சென்று அவர்களின் திருவுருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர், அவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 5 லட்சம் நிதி வழங்கினார். சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும் , ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றிருந்தனர்.