எஸ்பிபி உடல்நிலை; திங்கள் கிழமைக்குள் நல்ல செய்தி வரும்; சரண் நம்பிக்கை!

 

எஸ்பிபி உடல்நிலை; திங்கள் கிழமைக்குள் நல்ல செய்தி வரும்; சரண் நம்பிக்கை!

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை குறித்து திங்கள் கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கொரோனா உறுதியானதால் பிரபல பாடகரான எஸ்.பி பாலசுப்பிரமணியம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து அவர் வீடு திரும்புவார் என ஆரம்ப கட்டத்தில் கூறப்பட்டது. ஆனால் நாட்கள் போக போக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கும் நிலைக்கு வந்துவிட்டது.

எஸ்பிபி உடல்நிலை; திங்கள் கிழமைக்குள் நல்ல செய்தி வரும்; சரண் நம்பிக்கை!

எஸ்பிபி மீண்டு வருவாரா என்ற கேள்வி ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகக்கியது. அதனால் கடந்த 20 ஆம் தேதி எஸ்பிபிக்காக கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. அதில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, அவரது உடல் நிலை முன்னெற்றம் அடைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து அவரது மகன் சரண், தந்தையின் உடல் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் தன் சகோதரியுடன் சென்ற போது எஸ்பிபி மகிழ்ச்சி அடைந்ததாகவும் கூறினார்.

எஸ்பிபி உடல்நிலை; திங்கள் கிழமைக்குள் நல்ல செய்தி வரும்; சரண் நம்பிக்கை!

இந்த நிலையில் எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து 4 நாட்களாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் வரும் திங்கள் கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் சரண் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.