சத்ரு பயத்தை போக்கும் சரபேஸ்வரர்!

 

சத்ரு பயத்தை போக்கும் சரபேஸ்வரர்!

சத்ரு பயத்தை போக்கும் சரபேஸ்வரர்! உலகை காக்க சிவபெருமான் எடுத்த உருவம் தான் “சரபேஸ்வரர்” அவதாரம். சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. இவரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவைதான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத்

சத்ரு பயத்தை போக்கும் சரபேஸ்வரர்!

தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமெடுத்தார் மாகதேவன். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். சரபர் மூல மந்திரம் ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி,
பிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ
சத்ரு சம்ஹாரணாய சரப ஸாலுவாய
பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா. ஸ்ரீ சரபேஸ்வரரை போற்றும் இந்த மூல மந்திரத்தை தினமும் முடிந்தளவு பாராயணம் செய்தால் பலன்கள் தேடி வரும். சரபேஸ்வரரை வணங்க ஞாயிற்று கிழமை உகந்த நாளகும். அன்று, அசைவ உணவுகள் உண்ணாமல், உடல், மன சுத்தி செய்து கொண்டு, ராகு கால வேளையான மாலை 4.30 மணி முதல் 6.00 மணிக்குள் சிவன் கோவிலுக்கு

சத்ரு பயத்தை போக்கும் சரபேஸ்வரர்!

சென்று சரபேஸ்வரர் சந்நிதி முன்போ அல்லது சிவபெருமான் சந்நிதி முன்போ விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, இந்த துதியை மனமார வேண்டி பாராயணம் செய்தால், எதிரிகளால் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளாக இருந்தாலும் நீங்கி வெற்றி கிடைக்கும். சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார். புது வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தாமதங்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் நடைபெற தொடங்கும். மனம் மற்றும் செயல்புரிவதில் இருக்கும் தயக்கங்கள் நீங்கி தெளிவு கிடைக்கும். சர்பேஸ்வரர் கால பைரவர் அம்சமே. கால பைரவரையும் சேர்த்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் வந்து சேரும்.