‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை மகன் மாரடைப்பால் மரணம்!

 

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை மகன் மாரடைப்பால் மரணம்!

சின்னத்திரை நடிகை சாந்தி வில்லியம்ஸின் மகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

‘மெட்டி ஒலி’ சீரியலில் கொடுமைக்கார மாமியாராக நடித்து புகழ் பெற்றவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ் .தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை மகன் மாரடைப்பால் மரணம்!

இந்நிலையில் சாந்தி வில்லியம்ஸ் மகன் சந்தோஷுடன் விருகம்பாக்கத்தில் வசித்து வந்த நிலையில் அவரது மகன் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்ற நிலையில் குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார் சந்தோஷ்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை மகன் மாரடைப்பால் மரணம்!

நேற்று இரவு வழக்கம்போல் தனது அறைக்கு உறங்கச் சென்ற சந்தோஷ் இன்றுகாலை வெகுநேரமாகியும் அறை கதவை திறக்கவில்லை. இதனால் குடும்பத்தினர் சந்தேகத்துடன் சென்று பார்க்க சந்தோஷ் படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்  நடிகை மகன் மாரடைப்பால் மரணம்!

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருகம்பாக்கம் போலீசார், சந்தோஷின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் அவர் போதையில் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளனர் . சாந்தி வில்லியம்ஸ் மகன் இறப்புக்கு சின்னத்திரை நடிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.