முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்க சங்கரய்யா முடிவு!

 

முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்க சங்கரய்யா முடிவு!

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாயை வழங்குவதாக சங்கரய்யா தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்க சங்கரய்யா முடிவு!

தகைசால் தமிழர் விருதிற்கு முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. தமிழினத்தின் வளர்ச்சிக்கும், பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரய்யாவிற்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், பாராட்டு சான்றிதழும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர். என். சங்கரய்யா விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள ‘தகைசால் தமிழர்’ விருதினை இந்தாண்டுக்கு எனக்கு வழங்குவதாக மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

முதல்வர் அறிவித்த ரூ.10 லட்சத்தை கொரோனா நிதிக்கு அளிக்க சங்கரய்யா முடிவு!
எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கோவிட் 19 பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கோவிட் 19 பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.