சீனா, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்க… மத்திய அமைச்சரை கிண்டலடித்த சிவசேனா

 

சீனா, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்க… மத்திய அமைச்சரை கிண்டலடித்த சிவசேனா

விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் உள்ளது என்ற மத்திய அமைச்சரின் பேச்சுக்கு, அந்நாடுகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தங்க என்று சிவ சேனா கிண்டலாக தெரிவித்துள்ளது.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணையமைச்சர் ராவ்சாகேப் டான்வே, டெல்லியில் நடந்து கொண்டு இருக்கும் விவசாயிகள் போராட்டம் விவசாயிகளின் போராட்டமல்ல. சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த போராட்டத்தின் பின்னால் உள்ளன என்று தெரிவித்து இருந்தார். மத்திய அமைச்சரின் கருத்து உண்மை என்றால் அந்த நாடுகளுக்கு எதிராக ஏன் பதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிவ சேனா கேள்வி எழுப்பியுள்ளது.

சீனா, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்க… மத்திய அமைச்சரை கிண்டலடித்த சிவசேனா
சஞ்சய் ரவுத்

சிவ சேனாவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத் இது தொடர்பாக கூறுகையில், இது போன்ற சூழ்நிலைகளில் அண்டை நாடுகளுக்கு எதிராக பதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மற்றும் ராணுவ படைகளின் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்ய வேண்டும்.

சீனா, பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துங்க… மத்திய அமைச்சரை கிண்டலடித்த சிவசேனா
விவசாயிகள் போராட்டம் (கோப்பு படம்)

விவசாயிகளின் கிளர்ச்சியின் பின்னணியில் சீனாவும், பாகிஸ்தானும் இருப்பதற்கான தகவல் மத்திய அமைச்சரிடம் இருந்தால், பாகிஸ்தான் துறை அமைச்சர் உடனடியாக சீனா மற்றும் பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன் விவசாயிகள் நடத்திய நாடு தழுவிய முழு அடைப்புக்கு சிவ சேனா ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.