தீமையை பார்க்காதே, கேட்காதே, பேசாதே… நடிகை கங்கனா ரனாவத் குறித்து சஞ்சய் ரவுத்

 

தீமையை பார்க்காதே, கேட்காதே, பேசாதே… நடிகை கங்கனா ரனாவத் குறித்து சஞ்சய் ரவுத்

தீமையை பார்க்காதே, தீமையை கேட்காதே, தீமையை பேசாதே என்ற மகாத்மா காந்தியின் பாடத்தை நான் நம்புகிறேன் என நடிகை கங்கனா குறித்து சிவ சேனாவின் சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், சிவ சேனாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. கங்கனா ரனாவத் மும்பையிலிருந்து தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்திற்கு சென்ற பிறகும் டிவிட்டரில் சிவ சேனாவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். கங்கனா ரனாவத் அண்மையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், நடிகை ஊர்மிளா தனது நடிப்பால் அறியப்படவில்லை, ஆனால் மென்மையான ஆபாசத்தை செய்ததால் அறியப்பட்டார்.

தீமையை பார்க்காதே, கேட்காதே, பேசாதே… நடிகை கங்கனா ரனாவத் குறித்து சஞ்சய் ரவுத்
கங்கனா ரனாவத்

மேலும், ஹீரோவுடன் தூங்கிய பிறகே, தனக்கு இரண்டு நிமிட காட்சிகள், ஐயிட்டம் பாடல்கள் மற்றும் ஒரு காதல் காட்சி அனைத்தும் பாலிவுட் வழங்கியது என கங்கனா கூறியிருந்தார். கங்கனா ரனாவத்தின் பேட்டி குறித்து சிவ சேனாவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ரவுத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், எந்த தீமையையும் பார்க்காதே, தீமையை கேட்காதே, தீமையை பேசாதே என்ற மகாத்மா காந்தியின் பாடத்தை நான் நம்புகிறேன்.

தீமையை பார்க்காதே, கேட்காதே, பேசாதே… நடிகை கங்கனா ரனாவத் குறித்து சஞ்சய் ரவுத்
ஊர்மிளா

யாராவது அப்படி பேசினால் அது அவர்களின் கலாச்சாரத்தை மட்டுமே காட்டுகிறது. சிவ சேனாவுக்கு கங்கனா ரனாவத் ஒரு பிரச்சினையை இல்லை. நாட்டில் இதர பல பிரச்சினைகள் உள்ளன என தெரிவித்தார். கங்கனா ரனாவத் அண்மையில் தனது அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு நஷ்ட ஈடாக மும்பை மாநகராட்சியிடம் ரூ.2 கோடி கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.