மணல் கடத்திய மணப்பாறை திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

 

மணல் கடத்திய மணப்பாறை திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

திருச்சி மாவட்டம் முத்தப்புடையான்பட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக வந்த தகவலையடுத்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படையினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜேசிபி மற்றும் இரண்டு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநர்கள் மூன்று பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருச்சி மணப்பாறை திமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி உடையது என தெரியவந்துள்ளது. இதனையறிந்த ஆரோக்கியசாமி தலைமறைவனார்.

மணல் கடத்திய மணப்பாறை திமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

இந்நிலையில் மணப்பாறை கிழக்கு ஒன்றிய கழக பொருப்பாளர் எஸ். ஆரோக்கியசாமி கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டுவந்ததால் ஆரோக்கியசாமி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து ஆரோக்கியசாமி தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.