காந்தி குடும்பம் மகாராஷ்டிரா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன்?.. பா.ஜ.க. பகீர் தகவல்

 

காந்தி குடும்பம் மகாராஷ்டிரா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன்?.. பா.ஜ.க. பகீர் தகவல்

ஊழல் பணத்தில் ஒரு பகுதியை வாங்குவதால் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மகாராஷ்டிரா நிலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பா.ஜ.க.வின் சம்பிட் பத்ரா தெரிவித்தார்.

பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பத்ரா கூறியதாவது: எப்பொழுது விஷயங்களை அரசியலாக்கக்கூடாதோ அப்பொழுது காங்கிரஸ் குறிப்பாக காந்தி குடும்பம் அரசியல் செய்யும். பிரியங்கா காந்தி பேட்டி கொடுப்பார், ராகுல் காந்தி டிவிட் செய்வார். அவர்கள் எப்படி விமர்சனம் செய்கிறார்கள் என்பதை தேசம் பார்த்து கொண்டு இருக்கிறது. தேசம் அதற்கு பதிலளிக்கும். காந்தி குடும்பத்தின் ஆணவம் வெளிப்படுகிறது.

காந்தி குடும்பம் மகாராஷ்டிரா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன்?.. பா.ஜ.க. பகீர் தகவல்
சம்பிட் பத்ரா

அவர்கள் வழியை பாருங்கள், ஒருநாள் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதுகிறது, அடுத்த நாள் அவர்கள் (காங்கிரஸ்) முன்னாள் பிரதமரை கடிதம் எழுத சொல்கிறார்கள், பின் சோனியா காந்தி கடிதம் எழுதுகிறார், காலை முதல் மாலை ராகுல் காந்தி டிவிட்டரில் போஸ்ட் போடுகிறார் அதற்கு அடுத்த நாள் பிரியங்கா காந்தி பேட்டி கொடுக்கிறார். அந்த பேட்டியில், அவர்கள் ஆலோசனை வழங்க விரும்புவதாக பிரியங்கா காந்தி சொல்கிறார். ஆனால் உண்மையில் அவர்கள் அரசாங்கத்தை தாக்க விரும்புகிறார்கள். காங்கிரஸ் இன்னும் விற்காத தனது தோல்வியடைந்த பொருளை மீண்டும் விற்பனை செய்ய முயற்சி செய்கிறது. தொற்றுநோயை அதற்கான வாய்ப்பாக காங்கிரஸ் பார்க்கிறது.

காந்தி குடும்பம் மகாராஷ்டிரா குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன்?.. பா.ஜ.க. பகீர் தகவல்
காங்கிரஸ்

தொற்றுநோயின் இந்த சூழ்நிலையில் சூது அரசியல் செய்வதன் மூலம் நாட்டில் பயத்தை பரப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது. போலி செய்திகளை காங்கிரஸ் பரப்ப முயற்சி செய்கிறது. நாட்டில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிராவின் நிலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மகாராஷ்டிராவின் நிலவரம் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏன்? ஏனென்றால் அவர்கள் ஊழல் பணத்தில் ஒரு பகுதியை பெறுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.