சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி வசூல்!

 

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி வசூல்!

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி ரொக்கம், இரண்டரை கிலோ தங்கம் உள்ளிட்டவை வசூலாகி உள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன் மற்றும் உண்டியல் காணிக்கைகள் மாதம் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது.

சமயபுரம் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 கோடி வசூல்!

அந்த வகையில், கடந்த ஜூலை மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, சமயபுரம் கோயில் மண்டபத்தில், இணை ஆணையர் கல்ணயாணி தலைமையில், உதவி ஆணையர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில், பக்தர்கள், தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில், கடந்த 13 நாட்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 676 ரொக்கம் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், 2 கிலோ 626 கிராம் தங்கம் மற்றும் 6 கிலோ 54 கிராம் வெள்ளியும் வசூல் ஆகி உள்ளது. அத்துடன், 95 வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைக்கப்பெற்று உள்ளதாக கோயில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.