’’சமச்சீர் கல்வியால் தான் நீட் தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்’’-வினோஜ் செல்வம்

 

’’சமச்சீர் கல்வியால் தான் நீட் தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்’’-வினோஜ் செல்வம்

திமுக கட்சி கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் தெரிவித்தார்.

’’சமச்சீர் கல்வியால் தான் நீட் தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்’’-வினோஜ் செல்வம்

தஞ்சாவூரில் மாவட்ட புதிய இளைஞர் அணி மாவட்ட மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி தலைவர் நவீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

’’சமச்சீர் கல்வியால் தான் நீட் தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்’’-வினோஜ் செல்வம்

இக்கூட்டத்தில் அவர் பேசியபோது, திமுக கட்சி கொண்டு வந்த சமச்சீர் கல்வியால் தான் தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்றும் இந்தி படித்தால் தமிழ் அழியாது திராவிட முன்னேற்ற கழகம் தான் அழியும் என்றும், உலகத்தில் உள்ள அனைத்து மொழிகள் வந்தாலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

முன்னதாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் , தொண்டர்கள் கலந்து கொண்டனர்.