கலர் கலர் கண்ணாடி… சுட்டிக்குழந்தை என நிரூபித்த சாம் கரண்!
Oct 25, 2020, 20:42 IST1603638772000
சென்னை அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர் சாம் கரணுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சுட்டிக்குழந்தை என செல்லமாக அழைக்கப்படும் சென்னை அணியின் கிரிக்கெட் வீரர் சாம் கரண், பெங்களூருக்கு எதிரான இன்றைய போட்டியில், குழந்தைகள் பயன்படுத்துவதை போன்ற கண்ணாடியுடன் களமிறங்கினார்.
தலையில் மஞ்சள் நிற பேண்ட், கையிலும் மஞ்சள் நிற பேண்ட் மற்றும் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்துடன் கூடிய சன் க்ளாஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஜொலிக்கும் சாம் கரண் ஒவ்வொரு போட்டியிலும், தனி ஸ்டைலை காட்டி அசத்திவருகிறார். பிரிட்டனை சேர்ந்த இவர், தனக்கென ஒரு ஸ்டலை வைத்துக்கொண்டு மிக குறுகிய நாட்களில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.