தஞ்சையில் உப்பு சத்யாகிரக நினைவு தொடர் பேரணி துவக்கம்!

 

தஞ்சையில் உப்பு சத்யாகிரக நினைவு தொடர் பேரணி துவக்கம்!

தஞ்சாவூர்

நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு நிறைவு பெற உள்ளதை முன்னிட்டும், உப்பு சத்தியாகிரக விழாவை நினைவு கூறும் வகையிலும், தஞ்சையில் இன்று உப்பு சத்யாகிரக நினைவு தொடர் பேரணி நடைபெற்றது. இதனை ஒட்டி, திருச்சியில் இருந்து நேற்று சைக்களில் பேரணியாக புறப்பட்ட கல்லூரி மாணவர்கள் இன்று தஞ்சை மாவட்டம் வந்தடைந்தனர்.

தஞ்சையில் உப்பு சத்யாகிரக நினைவு தொடர் பேரணி துவக்கம்!

தொடர்ந்து, தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கோவிந்தா ராவ், உப்பு சத்யாகிரக நினைவு தொடர் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வேதாரண்யம் உப்பு சத்யாகிரக போராட்டத்தில் பங்கேற்ற ராஜாஜி, மகாத்மா காந்தி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் வேடமணிந்த நபர்கள் சாலையில் பேரணியாக சென்றனர்.

தொடர்ந்து, மாணவர்களின் சைக்கிள் பேரணியானது தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, பாபநாசம் வழியாக சென்று திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.