மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு!

 

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு!

மோடியால் பாராட்டப் பட்டு கந்துவட்டி விவகாரத்தில் சிக்கிய மதுரை சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு!

சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று விசாரிக்கிறது. ரூ. 30 ஆயிரம் கடனை வட்டியுடன் செலுத்திய பிறகும் கூடுதல் வட்டி கேட்டதாக மதுரைஅன்புநகரை சேர்ந்த கங்கை ராஜன் போலீசில் புகார் அளித்திருந்தார்.

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு!

அதனடிப்படையில் கந்துவட்டி தடுப்பு சட்டத்தில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிந்த நிலையில் மோகன் தலைமறைவானார்.தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி பாஜகவில் சேர்ந்த இவர் கந்துவட்டி தொழிலையும் செய்து வந்ததாகத் தெரிகிறது.

மோடி பாராட்டிய சலூன் கடைக்காரர் முன்ஜாமீன் கேட்டு மனு!

கொரோனா பேரிடர் காலத்தில் மதுரை மேலடை பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் மோகன் தனது மகளின் கல்வி செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை ஏழைகளுக்கு உதவினார். இவரது சேவையை பலரும் பாராட்டிய நிலையில் மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மோகனுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.