மனைவி குடிக்க பணம் தராததால் வீட்டை கொளுத்திய கணவன்!

 

மனைவி குடிக்க பணம் தராததால் வீட்டை கொளுத்திய கணவன்!

மது குடிக்க மனைவி பணம் தராத ஆத்திரத்தில் சொந்த வீட்டையே கணவன் கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தொளசம்பட்டி ஊராட்சி சம்பளகாடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பழனியம்மாள். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்துள்ளார். மது பழக்கத்துக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த குமார் மனைவியிடம் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. பழனியம்மாள் அருகில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தார். ஆனால் அந்த வருமானத்தையும் மது குடிக்க கேட்டு குமார் தகராறு செய்து வந்ததால் குடும்பத்தில் தினசரி பிரச்சனை வெடித்துள்ளது.

மனைவி குடிக்க பணம் தராததால் வீட்டை கொளுத்திய கணவன்!

ரேஷன் கடையில் விற்கப்படும் அரிசியை கொண்டு குடும்பம் நடத்தி வந்த பழனியம்மாள், கணவரின் அடி உதை கொடுமை தாங்க முடியாமல் தனது மூன்று பிள்ளைகளுடன் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் சம்பவத்தன்று மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் குமார் .பணம் இல்லை என்று பழனியம்மாள் திட்டவட்டமாகக் கூற இந்த வீட்டில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்கிறேன் என்று கூறியவர் குடிசை வீட்டிற்கு தீ வைத்துள்ளார். இதனால் பழனியம்மாள் வீட்டில் இருந்த பொருட்களும், குடும்ப அட்டை ஆதார் அட்டை, அவரது பிள்ளைகள் புத்தகங்களும் தீயில் கருகி நாசமானது.

மனைவி குடிக்க பணம் தராததால் வீட்டை கொளுத்திய கணவன்!

இதுகுறித்து பழனியம்மாள் பிள்ளைகளுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் சொந்த வீட்டுக்கு தீ வைத்த குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மூன்று பிள்ளைகளுடன் நடுத்தெருவில் செய்வதறியாது திகைத்து வரும் பழனியம்மாளுக்கு உரிய உதவி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.