சேலம்- தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்- சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

 

சேலம்- தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்- சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

சேலம்

சேலம் குரங்குச்சாவடி அருகே, வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டதில்லை என்றும், அந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்- தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்- சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு


சேலம் குரங்குச்சாவடி அருகே பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரில் வசித்து வருபவர் அன்பழகன். இவர் தனது தம்பியுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முந்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில், அன்பழகன் மனைவி புஷ்பா, தம்பி கார்த்தி, அவருடைய

சேலம்- தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த விவகாரம்- சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

மனைவி மகேஸ்வரி, கார்த்தி குழந்தைகள் சர்வேஷ்(12), முகேஷ்(10) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அன்பழகன் மட்டும் உயிர் தப்பினார். இந்த நிலையில், தீ விபத்தில் சந்தேகம் இருப்பதால், உரிய விசாரணை செய்யவேண்டும் எனவும் இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.