சேலம்: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சித் தலைவர்! – கைது செய்ய வலியுறுத்தல்

 

சேலம்: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சித் தலைவர்! – கைது செய்ய வலியுறுத்தல்

சேலம் மாவட்டத்தில் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சிமன்றத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம்: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சித் தலைவர்! – கைது செய்ய வலியுறுத்தல்

சேலம் மாவட்டம் ஜல்லூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி (52). இவர் இந்த பகுதியில் உள்ள தன்னுடைய சொந்த நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார். இது பூர்வீக சொத்து என்பதால் பழனிசாமியின் சகோதரர் தன்னுடைய பங்கு நிலத்தை 2015ம் ஆண்டு விற்பனை செய்ய முயன்றுள்ளார். இதை எதிர்த்து பழனிசாமி பாகப்பிரிவு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் வழக்கைத் திரும்பப் பெறவும், சொத்தை விற்றுவிட்டு செல்லும்படியும் தும்மல்பட்டி ஊராட்சித் தலைவர் மணிகண்டன் என்பவர் பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மணிகண்டன் தி.மு.க-வைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன பழனிசாமி தன் குடும்பத்தினருடன் இன்று சேலம் கலெக்டர் அலுவலகம் வந்து இது தொடர்பாக புகார் மனு அளித்தார்.

சேலம்: விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சித் தலைவர்! – கைது செய்ய வலியுறுத்தல்
அப்போது அவரது மனைவி விஜயராணி கூறுகையில், “தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து எங்களைத் தாக்கினார். மேலும். வீட்டையும், நிலத்தையும் காலி செய்ய வேண்டும் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதுடன், கொலை மிரட்டல் விடுத்த தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்க வந்தோம்” என்றார்.
நிலத்தகராறு காரணமாக தி.மு.க நிர்வாகி மீது புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.