காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

 

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

காவலர் வீரவணக்க நாளையொட்டி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிரிழந்த காவலர்களுக்கான நினைவுச்சின்னம் பகுதியில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. பிரவேஷ்குமார், ஏடிஎஸ்பி குணசேகரன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஐஜி பிரதீப்குமார், கடந்த ஓராண்டில் நாடுமுழுவதும் பணியின்போது 264 போலீசார் உயிரிழந்து உள்ளதாகவும், காவல்துறை பணி என்பது மிகவும் சவால் மிக்க, ஆபத்து நிறைந்த பணியாக உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த சூழலிலும் பொதுமக்களின் அமைதிக்கும், நிம்மதியான வாழ்வுக்கும் வழிவகை செய்யும் வகையில் தொடர்ந்து போலீசார், தங்களது அர்ப்பணிப்புடன் கூடிய பணியை அளித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை

இந்த நிகழ்ச்சியின்போது துப்பாக்கி குண்டுகள் முழங்க உயிரிழந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

காவலர் வீரவணக்க நாள் – சேலம் சரக டிஐஜி மரியாதை