சேலம்- முன்விரோத்தில் தாக்கப்பட்ட நபர்- சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி
சேலம்
முன்விரோத்தில் தாக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1 ஆம் தேதி, சேலம் பழைய பேருந்து நிலையம் காந்திசிலை அருகே,கிச்சிப்பாளையம் பகுதியைச் சார்ந்த அகமது பஷா என்பவரை, அதே பகுதியைச் சார்ந்த சதீஷ் உள்ளிட்ட நான்கு பேர் தாக்கியதில் பலத்த
காயமடைந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சேலம்- முன்விரோத்தில் தாக்கப்பட்ட நபர்- சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி pic.twitter.com/GQF87oBdvR
— Top Tamil News (@toptamilnews) September 5, 2020
இது தொடர்பாக, சதீஷ் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில் மற்றவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், அகமது பாஷாவை நால்வரும் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.